» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வியாழன் 23, நவம்பர் 2023 5:16:35 PM (IST)

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது குறித்து பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது: நமது பொருளாதாரம், 3.5 டிரில்லியன் டாலரில் இருந்து, 35 டிரில்லியன் டாலராக உயரும். இதற்கான பணியை பிரதமர் மோடி தலைமையிலான பாஜ., அரசு செய்து வருகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 10வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவோம். காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியா பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. இப்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. "ஊழல்" மற்றும் "குடும்ப ஆட்சி" காரணமாக சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா மக்கள் கோபமாக இருக்கின்றனர். வரும் தேர்தலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தோல்வி அடைவார். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory