» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பியூஷ் கோயல் நம்பிக்கை
வியாழன் 23, நவம்பர் 2023 5:16:35 PM (IST)
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது: நமது பொருளாதாரம், 3.5 டிரில்லியன் டாலரில் இருந்து, 35 டிரில்லியன் டாலராக உயரும். இதற்கான பணியை பிரதமர் மோடி தலைமையிலான பாஜ., அரசு செய்து வருகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 10வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவோம். காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியா பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. இப்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. "ஊழல்" மற்றும் "குடும்ப ஆட்சி" காரணமாக சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா மக்கள் கோபமாக இருக்கின்றனர். வரும் தேர்தலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தோல்வி அடைவார். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










