» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை!

செவ்வாய் 14, நவம்பர் 2023 4:51:28 PM (IST)



நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவிமரியாதை செலுத்தினர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று காங்கிரஸ் தரப்பிலும் அரசுத் தரப்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக, தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் நேருவின் திருவுருவப் படத்திற்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட நாடாளுமன்ற எம்.பி.க்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் தலைவர்கள் பலரும் நேருவை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory