» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் டோல்கேட்டில் நின்ற கார்கள் மீது வேகமாக மோதியதில் 3பேர் உயிரிழப்பு!

வெள்ளி 10, நவம்பர் 2023 10:39:03 AM (IST)



கட்டுப்பாட்டை இழந்த கார் டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த கார்கள் மீது வேகமாக மோதியதில் 3பேர் உயிரிழந்தனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஊர்லி நகரில் இருந்து பாந்திரா நோக்கி நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. பாந்திரா-ஊர்லி சி லிங்க் சாலையில் உள்ள டோல்கேட்டுக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த கார்கள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory