» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்!

வியாழன் 9, நவம்பர் 2023 4:09:45 PM (IST)

கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மற்றும் குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகிய முவரும் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் வெளியிட்டாா்.மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு நவம்பர் 6-ஆம் தேதி கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது.

இந்த மூன்று நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முறைப்படி பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக அதிகரிக்கும். உச்சநீதிமன்றம் அதன் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையான 34 நீதிபதிகளுடன் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory