» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிளாட்பாரத்தில் ஏறிய அரசுப் பேருந்தால் 3 பேர் உயிரிழப்பு: ஆந்திராவில் சோகம்

செவ்வாய் 7, நவம்பர் 2023 11:24:35 AM (IST)



விஜயவாடா பேருந்து நிலையத்தில் பிளாட்பாரத்தின் மீது ஏறிய பேருந்தால் குழந்தை உட்பட 3பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அரசு பேருந்து நிலையத்தில் நேற்று 12-வது பிளாட்பாரத்தில் ஆட்டோ நகர் பணிமனையை சேர்ந்த பேருந்தை ஓட்டுநர் பின்னால் எடுக்க முயன்றார்.

அப்போது திடீரென முன்னால் இருந்த பிளாட்பாரத்தின் மீது ஏறியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒப்பந்த ஊழியர் வீரய்யா, பயணிகுமாரி மற்றும் 6 வயது ஆண் குழந்தை ஆகியோர் பேருந்தில் சிக்கி உயிரிழந்தனர். சுகன்யா எனும் பெண் படுகாயமடைந்தார். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாகமுதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory