» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்: குஜராத், தெலுங்கானாவில் 2 பேர் கைது!

ஞாயிறு 5, நவம்பர் 2023 10:32:47 AM (IST)

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை குஜராத், தெலுங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

உலக பணக்காரர்களில் ஒருவரான பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி. மும்பை வால்கேஷ்வரில் உள்ள அண்டிலா என்ற ஆடம்பர அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ந்தேதி முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. பணம் தரவில்லை எனில் முகேஷ் அம்பானியை சுட்டுக்கொலை செய்து விடுவேன் என மர்மநபர் இ-மெயிலில் மிரட்டல் விடுத்து இருந்தார்.

கொலை மிரட்டல் இ-மெயில் குறித்து மும்பை காவ்தேவி போலீசில் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல மறுநாளில் மீண்டும் இ-மெயில் மூலம் ரூ.200 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை 3-வது தடவையாக இ-மெயிலில் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை மர்மநபர் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்து இருந்தார். 8 நாட்களில் 3-வது தடவையாக வந்த இ-மெயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் இந்த இ-மெயில் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் 2 வேறுபட்ட இ-மெயிலில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதில் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்தும், மற்றொன்று குஜராத்தில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தெலுங்கானா விரைந்த மும்பை போலீசார் அம்மாநில போலீசாரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மிரட்டல் இ-மெயில் அனுப்பிய கணேஷ் வன்பார்தி(வயது19) என்ற வாலிபரை பிடித்து கைது செய்தனர். இதேபோல குஜராத்தில் இருந்து இ-மெயிலில் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷதாப் கான்(21) என்ற வலிபரையும் கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory