» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

வியாழன் 2, நவம்பர் 2023 11:50:17 AM (IST)



பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 111 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை எட்டி வரலாறு படைத்த இந்திய அணியினரை டெல்லியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பாராட்டியதுடன் அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு;- 'உங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை நான் தொடர்ந்து தேடினேன். இன்று உங்களுடன் இருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன், ஆசிய பாரா போட்டியில் நீங்கள் சிறப்பாக விளையாடியதற்கு உங்களை வாழ்த்துவதற்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சீனாவில் நாட்டிற்காக போட்டியிட்டபோது, உங்கள் பொன்னான மற்றும் மறக்க முடியாத தருணங்களை நான் உணர்ந்தேன். உங்கள் செயல்பாடுகள் எங்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது' என பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory