» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செல்போனை ஒட்டுக்கேட்பது திருடர்கள் செயல் : ராகுல் காந்தி கண்டனம்

செவ்வாய் 31, அக்டோபர் 2023 5:19:03 PM (IST)

செல்போன்களை ஒட்டுக்கேட்பது குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல் என ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது "எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல்.

ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். ஏகபோக முதலாளிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம். வழக்கமாக மோடி, அமித்ஷாவைதான் நம்பர் ஒன், நம்பர் 2 என்று சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பவர் அதானிதான்.

அதானிக்காகவே மோடியும், அமித்ஷாவும் வேலை செய்கிறார்கள். அதானி அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பிரச்சினைகளை திசை திருப்ப மத்திய அரசு இது போன்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory