» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 31, அக்டோபர் 2023 12:29:28 PM (IST)
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செப். 9-ஆம் தேதி கைது செய்தனா். தற்போது அவர் நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் உள்ளார். ஏற்கனவே மூன்று முறை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










