» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு!

திங்கள் 30, அக்டோபர் 2023 11:23:44 AM (IST)

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

இந்தநிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கேரளா விரைந்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory