» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

மதுபான மோசடி வழக்கில், கைதான டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

புதுடெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து, மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா பிறப்பித்த உத்தரவு: மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. மனுதாரர் செல்வாக்குமிக்கவர் என்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory