» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நான் தப்பி ஓடவில்லை, விரைவில் உலகின் முன் தோன்றுவேன் - அம்ரித்பால் சிங்
வெள்ளி 31, மார்ச் 2023 4:54:18 PM (IST)
"நான் தப்பி ஓடவில்லை, விரைவில் உலகின் முன் தோன்றுவேன்" என்று காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்ரித்பால் சிங் மீது உள்ள வழக்குகள் காரணமாக அவரை போலீசார்ர் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்ட அம்ரித்பால் சிங், அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை உண்மை என்று நம்ப வேண்டாம். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. விரைவில் உலகின் முன் தோன்றுவேன். தனியாக அல்ல; ஆதரவாளர்களோடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த அறிவிப்பை அடுத்து, அவர் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலிலோ அல்லது பத்திண்டாவில் உள்ள குருத்வாராவிலோ தோன்றக் கூடும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக, இந்த இரண்டு பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி.. டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்..!
புதன் 31, மே 2023 10:48:39 AM (IST)

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்திவைப்பு
புதன் 31, மே 2023 10:24:44 AM (IST)

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி!
திங்கள் 29, மே 2023 9:01:30 PM (IST)

ஆம்Mar 31, 2023 - 06:01:19 PM | Posted IP 162.1*****