» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோவிலில் கிணறு படிக்கட்டு இடிந்து 12பேர் பலி - ராமநவமி கொண்டாட்டத்தில் சோகம்!
வியாழன் 30, மார்ச் 2023 4:45:26 PM (IST)

இந்தூர் கோவிலில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென படிக்கட்டுகள் மளமளவென சரிந்து கீழே விழுந்தது. படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர்.
இந்த விபத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 30-35 பக்தர்கள் கிணற்றில் விழுந்தனர் என்று நேரில் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டி இந்தூர் காவல்துறை ஆணையர் மக்ரந்த் தியோஸ்கர் தெரிவித்தார். இந்தூர் கோவிலில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்
புதன் 31, மே 2023 3:56:37 PM (IST)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம்: டி.கே.சிவக்குமார் வது உறுதி!!
புதன் 31, மே 2023 10:48:39 AM (IST)

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்திவைப்பு
புதன் 31, மே 2023 10:24:44 AM (IST)

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)

மக்கள்Mar 30, 2023 - 06:48:37 PM | Posted IP 162.1*****