» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்தில் 7 பேர் பலி: சத்தீஸ்கரில் சோகம்!

வெள்ளி 2, டிசம்பர் 2022 4:50:27 PM (IST)

சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரி அருகே மல்கான் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த 12 தொழிலாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர். இந்த மண் சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 7 பேரின் உடலை மீட்டனர். மேலும் மண்சரிவில் சிக்கி உள்ள 5 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory