» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூரை வெளுத்து வாங்கிய கனமழை : இருவர் உயிரிழப்பு... நகரின் பல பகுதிகளில் வெள்ளம்!
புதன் 18, மே 2022 4:54:54 PM (IST)
பெங்களூரில் பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் சார்பில் பெங்களூரு நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மழை காரணமாக உல்லல் உபநகர் பகுதியில் பணியாற்றி வந்த இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். "உயிரிழந்தது பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவ்பாரத் மற்றும் உத்தரி பிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்கித் குமார் என தெரியவந்துள்ளது.
நேற்று மாலை தொடங்கி இரவு முழுக்க பெய்த பலத்த மழை காரணமாக நகரில் 155 மில்லிமீட்டர் அளவில் பதிவானது. பலத்த மழையை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. பலத்த மழை காரணமாக பெங்களூரு நகரின் ஜெ.பி. நகர், ஜெயாநகர், லால்பாக், சிக்பெட், மஜெஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யெஷ்வந்த்புர், எம்.ஜி. ரோடு, கப்பன் பார்க், விஜயாநகர், ராஜராஜேஷ்வரி நகர், கெங்கேரி, மகடி ரோடு, மைசூரு ரோடு மற்றும் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின்னல் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதால், மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை: திருவனந்தபுரம் அருகே சோகம்!
சனி 2, ஜூலை 2022 5:46:56 PM (IST)

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!
சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)

உதய்பூர் படுகொலையில் கைதானவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார் - பாஜக மறுப்பு!
சனி 2, ஜூலை 2022 3:44:12 PM (IST)

அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)

பிரதமர் மோடியை 3வது முறையாக புறக்கணித்த சந்திரசேகர் ராவ்: சின்ஹவுக்கு வரவேற்பு!
சனி 2, ஜூலை 2022 11:56:08 AM (IST)

வயநாட்டில் அடித்து நொறுக்கப்பட்ட எம்பி அலுவலகம் : ராகுல் காந்தி பார்வையிட்டார்
வெள்ளி 1, ஜூலை 2022 5:28:24 PM (IST)
