» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெப் தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண் பலாத்காரம்: தயாரிப்பாளர் கைது

வெள்ளி 10, செப்டம்பர் 2021 10:46:46 AM (IST)

மும்பையில் வெப் தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான ஆஷிஷ் சில திரைப்படங்களையும், 'வெப்’ தொடரையும் தயாரித்துள்ளார். இதற்கிடையில், 'வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஆஷிஷ் மீது கடந்த மார்ச் மாதம் 21 வயது நிரம்பிய இளம் பெண் மும்பை கோரிகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் ஆஷிஷ் பவ்ஷர் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஷிஷ் பவ்ஷரின் முன் ஜாமீனை கோர்ட்டு ரத்து செய்து செய்தது. இந்நிலையில், முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆஷிஷ் பவ்ஷரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory