» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த எம்எல்ஏ : பயணிகள் அதிர்ச்சி - போலீசில் புகார்!
சனி 4, செப்டம்பர் 2021 12:09:08 PM (IST)
பீகார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரயில் பயணத்தின்போது உள்ளாடையுடன் திரிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
பாட்னாவிலிருந்து டெல்லிக்கு சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எம்.எல்.ஏ கோபால் மண்டல் உள்ளாடையுடன் திரிந்துள்ளார். கோபால் மண்டல் செயலுக்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்க, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். டெல்லியில் உள்ள ரயில்வே போலீஸ் நிலையத்தில் பிரஹலாத் பாஸ்வான் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதில் எம்.எல்.ஏ வெள்ளை பனியன் மற்றும் உள்ளாடையில் சுற்றித்திரியும் போது குடிபோதையில் இருந்ததாக கூறி உள்ளார்.மேலும் , எம்.எல்.ஏ. என் தங்க மோதிரத்தையும் செயினையும் பறித்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கூறி உள்ளார். தனக்கு வயிற்றுப்போக்கு இருந்ததால் உள்ளாடையுடன் இருந்ததாக மண்டல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நான் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தேன். ரயிலில் ஏறியவுடன் எனக்கு வயிற்றுப்போக்கு ஆயிற்று. நான் பொய் சொல்லவில்லை" என்றார். ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த சட்டப்பேரவை உறுப்பினரின் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.