» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புனேவில் தனியார் ரசாயன ஆலையில் தீ விபத்து: 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
செவ்வாய் 8, ஜூன் 2021 11:57:00 AM (IST)
புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மராட்டிய மாநிலம் புனே அருகில் உள்ள பிரன்கட் பகுதியில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இது தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படும் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் பெண்கள் அதிக அளவில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கம்பெனியில் நேற்று பிற்பகல் திடீரென ஒரு மெஷின் வெடித்து தீவிபத்தி ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ முழுவதுமாக அனைத்து பகுதிக்கும் பரவிவிட்டது. இந்த தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஆலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது.சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட துணை முதல்வர் அஜித் பவார், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.