» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே விநியோகிக்க ஏன் அனுமதிக்கக் கூடாது? கேஜரிவால் கேள்வி

ஞாயிறு 6, ஜூன் 2021 9:21:44 PM (IST)

பீட்ஸா, பா்கா், உள்ளிட்டவற்றை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் போது ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஏன் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். திட்டத்தை செயல்படுத்தவிருந்த 2 நாள்களுக்கு முன்னரே மத்திய அரசு அதற்கு தடை விதித்துவிட்டது. திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் 5 முறை மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. 

பீட்ஸா, பா்கா், ஸ்மாா்ட்போன் மற்றும் துணிமணிகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் போது ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க ஏன் அனுமதிக்கக் கூடாது. நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வீசி வரும் நிலையில், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இல்லையெனில் ரேஷன் கடைகள் கரோனா தொற்றுபரவலுக்கான இடமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 70 லட்சம் ஏழை மக்கள் பயன்பெறுவாா்கள். பிரதமர் இந்த திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். நாட்டின் நலனுக்கான விஷயங்களில் எந்தவிதமான அரசியலும் இருக்கக்கூடாது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory