» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை அருகே கட்டிடம் இடிந்து 7 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

ஞாயிறு 30, மே 2021 9:03:34 AM (IST)

மும்பை அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரு சிறுவன், 3 பெண்கள் உட்பட 7பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ் நகர் நேரு சவுக் பகுதியில் சாய் சக்தி என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் உள்ள சிலாப் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர், தானே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் துரித கதியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணி நேற்று அதிகாலை 1 மணி வரை நடந்தது.

இந்த பயங்கர விபத்தில் இடிபாடுகளில் இருந்து 7 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவன், 3 பெண்கள் அடங்குவர். பலியானவர்கள் அனைவரும் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் துயரத்துக்கு காரணமான கட்டிடம் கட்டப்பட்டு 26 வருடங்கள் ஆனது தெரியவந்தது. சம்பவ இடத்தை தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் பார்வையிட்டார். அப்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory