பிரிட்டனில் நடைபெறவுள்ள லீ மேன்ஸ் கப் தொடரில் நடிகரும் ரேஸருமான அஜித் குமாரின் அணி பங்கேற்கிறது. நாளை நடைபெறம் இந்த கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளார்.
அஜித்தின் அழைப்பின் பேரில் முதல்வர் விஜய் அங்கு செல்வதாகக் கூறப்பட்டது. மேலும், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக கார் பந்தயத் தளங்களைப் பார்வையிடும் நோக்கில் முதல்வர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் பற்றிப் பேசிய அஜித் குமார், ”முதல்வர் விஜய் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அவர் முதல்வரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்து வருகிறார். எனது அழைப்பை ஏற்று அவர் இங்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்றவை இந்தியாவில் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

