விக்சித் பாரத் 2047 இலக்கை எட்டும் நோக்கில், மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் குணநலன்களை மேம்படுத்தக் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி ‘கல்விக் கொடி’ மற்றும் ‘கல்வி லோகோ’ ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.
டாக்டர் ஜெ. கோமளலட்சுமி உருவாக்கிய 'KLMN-SWASTIK Education Model' என்ற கல்வி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கல்விக் கொடி மற்றும் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது வெறும் தேர்வுகள் மற்றும் மதிப்பெண்களுடன் நின்றுவிடாமல்; அறிவு, சிந்தனைத் திறன், நற்பண்புகள், புதுமை படைத்தல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட எதிர்காலக் குடிமக்களை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
கல்விக் கொடியானது மாணவர்கள் தொடர்ந்து சிந்திக்கவும், கற்றதைப் புரிந்து கொள்ளவும், அதை நாட்டிற்குப் பயன்படும் வகையில் மாற்றவும் ஒரு தூண்டுகோலாகச் செயல்படும். ‘விக்சித் பாரத் 2047-க்கான மனித ஆற்றலை உருவாக்குதல்’ (Building Human Potential for Viksit Bharat @2047 – Education, Skills, Character and Contribution) என்ற தலைப்பில் கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார்.
மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நாட்டின் மனித வளத்தை மேம்படுத்தப் பங்காற்ற வேண்டும் என இக்கல்வி முயற்சி வலியுறுத்துகிறது.

