» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மோடி ஆட்சியில் இருக்கும் வரை, ஒரு அங்குல நிலத்தையும் கைப்பற்ற முடியாது: அமித்ஷா
செவ்வாய் 13, டிசம்பர் 2022 4:36:33 PM (IST)
மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஷா கூறுகையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் வெளிநாட்டு பங்களிப்பு குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதற்காக எல்லைப் பிரச்னையை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்புகின்றனர். ராஜீவ் காந்தி அறக்கட்டளை(ஆர்ஜிஎஃப்), சீன தூதரகத்திலிருந்து ரூ.1.35 கோடி பெற்றுள்ளார்கள்.
இது வெளிநாட்டு பங்களிப்பு விதிகளின்படி இல்லாததால் அதன் பதிவு ரத்து செய்யப்பட்டது. நேரு சீனா மீது கொண்ட அன்பின் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர இடம் தியாகம் செய்யப்பட்டது. நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, எங்களின் ஒரு அங்குல நிலத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது என்று ஷா கூறினார்.
JAI HINDDec 16, 2022 - 02:54:11 PM | Posted IP 162.1*****