» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணம் : ஜெயக்குமார்
திங்கள் 20, ஜூன் 2022 12:09:39 PM (IST)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பேசியதில் எந்த உள்நோக்கம் இல்லை. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மட்டுமே சொன்னேன். யார் ஒற்றைத் தலைமை என எதுவும் கூறவில்லை. அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. நான் பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை, பழனிசாமி பக்கமும் இல்லை.
பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விரைவில் சுமூக முடிவு எட்டப்படும். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துரோகத்தின் அடையாளம்: ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் கடும் விமர்சனம்!
திங்கள் 27, ஜூன் 2022 4:56:20 PM (IST)

தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்
சனி 25, ஜூன் 2022 12:33:15 PM (IST)

அக்னி பாதை திட்டம் ராணுவத்தின் மரியாதையை குறைத்துவிடும்: வைகோ அறிக்கை
வெள்ளி 17, ஜூன் 2022 5:30:16 PM (IST)

அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்: கோஷ்டி பூசல் உச்சகட்டம்!
புதன் 15, ஜூன் 2022 11:59:44 AM (IST)

மேகதாது அணை விவகாரம் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
திங்கள் 13, ஜூன் 2022 5:11:50 PM (IST)

தமிழ்நாடு கஞ்சா விற்பனைக் கூடமாக மாறி வருவதைத் தடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
திங்கள் 6, ஜூன் 2022 9:59:43 PM (IST)

JAY JAYJun 20, 2022 - 04:13:38 PM | Posted IP 162.1*****