» சினிமா » செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

திங்கள் 7, அக்டோபர் 2024 12:10:08 PM (IST)



பாலியல் புகார் எதிரொலியாக நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பிரபல நடன இயக்குநர், ஷேக் ஜானி பாஷா என்ற ஜானி மாஸ்டர், தமிழில் அரபிக்குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் சதீஷ் கிருஷ்ணனுடன் இணைந்து இவர் நடனம் அமைத்த ‘மேகம் கருக்காதா’ பாடலுக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜானி மாஸ்டர் குழுவில் இடம்பெற்றிருந்த 21 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், தன்னை பல வருடமாக அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஹைதராபாத் ராய்துர்கம் போலீஸில் புகார் கூறியிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதற்கிடையே, தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, ஹைதராபாத் ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரம் காரணமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விழா அழைப்பிதழ் திரும்பப் பெறப்படுவதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!

திங்கள் 14, அக்டோபர் 2024 8:56:05 PM (IST)

Sponsored Ads



CSC Computer Education



Thoothukudi Business Directory