» சினிமா » செய்திகள்

பிரபல நடிகர் - இயக்குநர் பிரதாப் போத்தன் காலமானார்!

வெள்ளி 15, ஜூலை 2022 10:36:44 AM (IST)

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன்(69) இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

1980-களில் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தார். 1978ஆம் ஆண்டு இயக்குநர் பரதனின் ஆரவம் திரைப்படத்தில் அறிமுகமானார். தகரம், ஆரோகணம், பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் டேஸ் ஆகியவை அவரது பிரபலமான மலையாளத் திரைப்படங்களில் சில. இவர் கடைசியாக மம்முட்டி நடித்த 'சிபிஐ5: தி பிரைன்' படத்தில் நடித்தார்.

தமிழில் ஆத்மா ராம்கி, ரஹ்மான், நாசர் நடிப்பில் ஆத்மா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். 'கிரீன் ஆப்பிள்' என்ற விளம்பர நிறுவனத்தையும் வைத்திருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை பிரதாப் போத்தன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory