» சினிமா » செய்திகள்

ஜெய்பீம் படத்தின் நிஜ நாயகிக்கு வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

செவ்வாய் 14, ஜூன் 2022 10:18:19 AM (IST)

ஜெய்பீம் படத்தின்  நிஜ நாயகியான பார்வதி அம்மாளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். 

இருளர் இன மக்களின் உண்மை சம்பவத்தை மையக்கருத்தாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் 'ஜெய் பீம்'. இப்படத்தினை இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்தார். மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஜெய் பீம்' ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தின் நிஜ நாயகியான பார்வதி அம்மாள் வறுமையில் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், பார்வதி அம்மாளுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் வீடு கட்டி தருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் , பார்வதி அம்மாளின் குடும்பத்தினரை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு வீடு கட்டி தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார். ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்காக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory