» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!

செவ்வாய் 10, மார்ச் 2026 5:12:49 PM (IST)



டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, 131 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்த மகத்தான வெற்றிக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியைக் கௌரவிக்கும் விதமாக, பிசிசிஐ இன்று பரிசுத் தொகையை அறிவித்தது. அதன்படி, இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணைக் குழுவினர் (Support Staff) அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உலகக் கோப்பையை வென்றதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில் இந்திய அணிக்கு ஏற்கனவே சுமார் 27 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory