» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா உலக சாதனை!

திங்கள் 27, ஜனவரி 2025 12:55:31 PM (IST)



டி20 கிரிக்கெட்டில் கடைசி 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 318 ரன்கள் எடுத்து  திலக் வர்மா உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ரையிறுதிக்கு தகுதி

இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

திலக் வர்மா இந்த ஆட்டத்தில் அடித்த 72 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 318 ரன்கள் (107, 120, 19 மற்றும் 72 ரன்கள்) அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு அவுட்டுகளுக்கு மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

சாதனை வீரர்கள் பட்டியல்

1. திலக் வர்மா - 318 ரன்கள்

2. மார்க் சாப்மேன் - 271 ரன்கள்

3. ஆரோன் பின்ச்/ஸ்ரேயாஸ் ஐயர் - 240 ரன்கள்

4. டேவிட் வார்னர் - 239 ரன்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory