» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மண்டல அளவிலான கராத்தே போட்டி. சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்.

ஞாயிறு 5, மார்ச் 2023 8:23:04 AM (IST)



தென் மண்டல அளவிலான கராத்தே போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர். 

தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி தூத்துக்குடி ஸ்பிக் நகரில் வைத்து அண்மையில் நடைபெற்றது . இதில் தென் தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி. சுரேஷ்குமார் செயல்பட்டார். 

இதில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலர் சென்சாய் முத்துராஜா தலைமையில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 தங்கப் பதக்கத்தையும், 10 வெள்ளிப் பதக்கத்தையும் 7 வெண்கல பதக்கத்தையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், பள்ளியின் இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி, பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியர் ஜான் சாமுவேல், கராத்தே பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory