» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மண்டல அளவிலான கராத்தே போட்டி. சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்.
ஞாயிறு 5, மார்ச் 2023 8:23:04 AM (IST)
தென் மண்டல அளவிலான கராத்தே போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி தூத்துக்குடி ஸ்பிக் நகரில் வைத்து அண்மையில் நடைபெற்றது . இதில் தென் தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி. சுரேஷ்குமார் செயல்பட்டார்.
இதில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலர் சென்சாய் முத்துராஜா தலைமையில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 தங்கப் பதக்கத்தையும், 10 வெள்ளிப் பதக்கத்தையும் 7 வெண்கல பதக்கத்தையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், பள்ளியின் இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி, பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியர் ஜான் சாமுவேல், கராத்தே பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.