» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார் அதிரடி சதம்: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!

ஞாயிறு 8, ஜனவரி 2023 8:59:30 AM (IST)



சூர்யகுமார் யாதர் அதிரடி சதம் அடித்து அசத்த, இலங்கைக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இலங்கை அணிக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் சேர்த்தது. சுப்மான் கில் 46 ரன்களும் ராகுல் திரிபாதி 35 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 112 ரன் சேர்த்தார். இதில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் அக்ஷர் பட்டேல் 21 ரன்கள் சேர்த்தார். 

இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து 229 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் பாண்ட்யா, உம்ரான் மாலிக், சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory