» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு!

சனி 7, ஜனவரி 2023 10:16:50 AM (IST)

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (36) அடுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் இரட்டையர் சாம்பியன் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு விடைபெறுவார் என கூறப்படுகிரது. மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார்.

மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார். முன்னதாக, சானியா 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஓய்வு பெற விரும்பினார், ஆனால் அவர் முழங்கை காயம் காரணமாக யுஎஸ் ஓபனை தவறவிட்டார், அவரது ஓய்வு தாமதமானது.

முன்னதாக சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபனில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவார். அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுவார். சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டைய பட்டங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக விளங்கி வருகிறார். அவர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory