» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

ஞாயிறு 31, மே 2026 10:35:20 AM (IST)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, சென்னை உட்பட 5 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னை உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருணாளினி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory