» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்தால் ஆதரவு வாபஸ்..? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை!
புதன் 20, மே 2026 12:45:39 PM (IST)

"மக்கள் தீர்ப்பிற்கு விரோதமாக, புதிய தவெக அமைச்சரவையில் அதிமுகவை இணைக்க முயற்சித்தால், அரசுக்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவை நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய நேரிடும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கடந்த சில நாட்களாகவே அரசியல் உள்கட்டமைப்பு வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது ஆளும் கூட்டணி மற்றும் ஆதரவளிக்கும் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழ்நாட்டில் புதிய தவெக அரசுக்கு இடதுசாரிகளாகிய நாங்கள் ஆதரவளித்திருப்பதற்குக் குறிப்பிட்ட முக்கியக் காரணங்கள் உள்ளன. மாநிலம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகவும், தற்காலிக அரசியல் பலவீனத்தைப் பயன்படுத்தி கொல்லைப்புறம் வழியாக பாஜக மற்றும் ஆளுநர் ஆட்சி தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்த ஆதரவை வழங்கினோம்.
நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பு என்பது திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராகத்தான் இருந்தது. அதேசமயம் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் தவெகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருந்ததால், இடதுசாரிகளும், விசிக-வும் அதற்கு ஆதரவளித்துள்ளோம்.
தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுகவின் பங்களிப்பு குறித்து அவர் பேசியதாவது: "ஏற்கனவே இரு திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகளுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இத்தகைய சூழலில், அதிமுகவை தவெக அரசு தங்களது ஆட்சியில் சேர்த்துக் கொள்வதோ அல்லது அமைச்சரவையில் இடம் தருவதோ ஒட்டுமொத்த மக்கள் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இது ஒரு நல்லாட்சிக்கு உகந்ததாக அமையாது.
அத்தகைய கட்சியின் ஆதரவைப் பெற்று தவெக ஆட்சியைத் தொடர்வது என்பது தேர்தல் வாக்குறுதிக்கும், மக்களுடைய தீர்ப்பிற்கும் முரணானது. தவெக தலைமை அத்தகைய நிலைக்குச் செல்லாது என்று நான் இன்னமும் நம்புகிறேன். ஆனால், இவற்றை எல்லாம் மீறி அதிமுகவின் ஆதரவை அதிகாரப்பூர்வமாகப் பெற்று அவர்களை அமைச்சரவையில் இணைப்பார்கள் என்றால், தவெக அரசுக்கு ஆதரவளிப்பது குறித்த எங்களுடைய முந்தைய முடிவை நாங்கள் நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய நேரிடும்." என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு அலுவலகங்களில் ஆய்வு எனும் பெயரில் தவெகவினர் அத்துமீறல்: தினகரன் குற்றச்சாட்டு
புதன் 20, மே 2026 5:07:09 PM (IST)

சட்டசபையில் விஜய் படத்தை காட்டிய தவெக எம்.எல்.ஏ : சபாநாயகர் கண்டனம் - அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!
புதன் 20, மே 2026 4:38:33 PM (IST)

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 4:31:10 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 10:40:33 AM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)










