» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்: இபிஎஸ்

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:37:19 PM (IST)



திமுக 20 இடங்களைத் தாண்டுவதே கடினம் என்றும், அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்ற அதிமுக - பாமக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக அரசு மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் செந்தில் பாலாஜி மீண்டும் சிறைக்கே செல்வார் என்றார். மேலும், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் மற்றும் அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி திமுக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது குற்றவாளிகளைக் காப்பாற்றவே என்று அவர் சாடினார்.

"திமுக ஆட்சியில் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு கொள்ளை நடப்பதாக" குற்றம் சாட்டிய அவர், குமாரபாளையத்தில் பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சையில் நேர்ந்த தவறை சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சியில் இத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். கேபிள் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்றும், கரோனா காலத்தில் மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' வழங்கி அவர்களின் எதிர்காலத்தை அதிமுக அரசு பாதுகாத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

திமுகவினர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, "அவர்கள் 20 இடங்களில் வெற்றி பெற்றாலே அது பெரிய ஆச்சரியம் தான்" என்றார். மேலும், "எதிரியுடன் கூட்டணி சேர்ந்திருப்பவர் (பிரேமலதா) கூட மனதிற்குள் அதிமுகவிற்காகவே குரல் கொடுக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதா கொண்டு வர நினைத்த 33% மகளிர் இடஒதுக்கீட்டை அன்றைய காங்கிரஸ் - திமுக கூட்டணி தடுத்ததாகவும், தற்போது அது நிறைவேறியுள்ள நிலையில் பெண்களுக்கு துரோகம் இழைத்த கட்சிகளுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory