» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)
நெல்லை - செங்கோட்டை ரயிலில் பெண் பயணியின் நகையைப் பறிக்க முயன்ற குற்றாலநாதர் கோவில் ஊழியரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 12-ஆம் தேதி நெல்லையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற பயணிகள் ரயிலில் கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் பயணம் செய்தார். ரயில் தென்காசி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அதே பெட்டியில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சாந்தியின் கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்றுள்ளார். சாந்தி கூச்சலிடவே, பிடிபடுவோம் என்ற பயத்தில் அந்த நபர் ரயிலிலிருந்து இறங்கித் தப்பி ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட சாந்தி அளித்த புகாரின் பேரில், தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரயில்வே டிஎஸ்பி லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், நகை பறிக்க முயன்றவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் கீழரத வீதியைச் சேர்ந்த கருப்பசாமி (55) என்பது தெரியவந்தது. இவர் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ் புலவராகப் பணியாற்றி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கருப்பசாமியைப் போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். கைதான அவர் மீது காவல்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியரே ரயிலில் நகை பறிக்க முயன்ற சம்பவம் சக பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக எம்.பி. தொகுதிகள் 59 ஆக உயரும்; குறைய வாய்ப்பில்லை: அண்ணாமலை விளக்கம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:40:37 PM (IST)

திருப்பூரில் விஜய் பிரசாரம்: வெயில் தாங்காமல் 7 பெண்கள் உட்பட 9 பேர் மயங்கி விழுந்தனர்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:31:42 PM (IST)

திமுக எனும் தீயசக்தியை ஒழிக்க அதிமுக கூட்டணியே ஒரே வழி : டிடிவி தினகரன் பிரச்சாரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:31:36 PM (IST)

தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கிலிருந்துதான் வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:54:58 PM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)






