» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது: 10 லிட்டர் ஊறல் பறிமுதல்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:44:43 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டம் இரணியலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு, பேச்சிப்பாறை அடுத்த மணலோடை - கிள்ளிக்கோணம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கமலி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மணலோடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கிள்ளிக்கோணம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சதீஷ் (43) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள மலை மறைவிடத்தில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சி வந்ததையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள், குடம், கப் மற்றும் மரப்பலகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடுபுகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு: கஞ்சா போதை இளைஞர் கைது; இருவருக்கு வலை!
புதன் 15, ஏப்ரல் 2026 5:19:42 PM (IST)

விதிகளை மீறி திமுகவினர் ரூ.8,000 கூப்பன் விநியோகம் : தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
புதன் 15, ஏப்ரல் 2026 5:11:00 PM (IST)

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் மோசடியால் இளம்பெண் தற்கொலை: விஜய் குற்றச்சாட்டு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:53:13 PM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)






