» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதுகில் குத்தினார்கள்; 9 ஆண்டு காலம் காத்திருந்தேன்: இபிஎஸ் மீது சசிகலா கடும் தாக்கு
புதன் 25, பிப்ரவரி 2026 4:43:18 PM (IST)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து வி.கே.சசிகலா உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: "அம்மாவுடன் (ஜெயலலிதா) கூடவே இருந்து நல்லது, கெட்டது அனைத்தையும் பார்த்தவள் நான். 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து அவரை வீட்டிற்கு அழைத்து வரத் தயாராக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால், வெளியே இருப்பவர்கள் விதவிதமாகக் கதைகளைக் கட்டினார்கள். நானே அவரைக் கொன்றுவிட்டதாகக் கூடப் பேசினார்கள்."
"நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனை தீர்ப்பு வந்த மறுநாளே நான் பெங்களூரு சிறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், அவசரமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து, இப்போது பதவியில் இருக்கிறாரே இவரை முதலமைச்சராக ஆக்குவது என முடிவெடுத்தேன். இன்று அவரது பெயரைக் கூடச் சொல்ல நான் விரும்பவில்லை. பெயர் சொல்லும் அளவிற்கு அவர் நல்லவர் கிடையாது."
"எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத போது பரோல் கேட்டோம். பெங்களூரு சிறை நிர்வாகம் உடனடியாக 15 நாட்கள் அனுமதி அளித்தது. ஆனால், தமிழக அரசிடம் இருந்து அனுமதி வரவேண்டும் என அவர்கள் கூறினர். நான் யாரை அந்தப் பதவியில் உட்கார வைத்துவிட்டுப் போனேனோ, அவரே எனக்கு அனுமதி அளிக்கவில்லை எனச் சென்னையிலிருந்து பதில் வந்தது."
"எடப்பாடி பழனிசாமி தன்னை மாற்றிக்கொள்வார் என்று கடந்த 9 ஆண்டு காலமாகப் பொறுமையாகக் காத்திருந்தேன். ஆனால், போதுமான அளவு எனது முதுகில் குத்திவிட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அம்மாவின் பிறந்தநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றார். தனது உரையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை இறுதிவரை குறிப்பிடாமல் வி.கே.சசிகலா கடுமையாகச் சாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடுபுகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு: கஞ்சா போதை இளைஞர் கைது; இருவருக்கு வலை!
புதன் 15, ஏப்ரல் 2026 5:19:42 PM (IST)

விதிகளை மீறி திமுகவினர் ரூ.8,000 கூப்பன் விநியோகம் : தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
புதன் 15, ஏப்ரல் 2026 5:11:00 PM (IST)

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் மோசடியால் இளம்பெண் தற்கொலை: விஜய் குற்றச்சாட்டு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:53:13 PM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)







ஆமாFeb 25, 2026 - 05:01:08 PM | Posted IP 162.1*****