» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)
நாகர்கோவில் அருகே குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநர் ஆகியோருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் நேற்று (டிச. 10) செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், மினி பஸ் ஓட்டுநரான கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் (48) என்பவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் ஜெபர்சனுக்கு ரூ. 17,000-ம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ. 10,500-ம் என மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










