» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை மோசடி: 3 பேர் கைது
சனி 9, ஆகஸ்ட் 2025 11:49:11 AM (IST)
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் 5வது குருக்குவீதி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார் (50), திண்டிவனம், சஞ்சிவி ராயன்பேட்டை பகுதியை சேர்ந்த மக்தூம் இப்ராகிம் மகன் முகமது இஸ்மாயில்(51) மற்றும் திண்டிவனம், ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு(42) ஆகியோர் பணி ஆணை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் திண்டிவனம் சென்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது என்ன செயல்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 4:35:36 PM (IST)










