» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

செங்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் எவ்வித காரணமில்லாமல் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.
பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆட்படாத செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளி ஆசிரியைகளின் பணி மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தியும், இதற்கு காரணமான முன்னாள் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இம் மாறுதலுக்கு உத்தரவு வழங்கிய தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்தும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் உட்பட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா? விஜய்க்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:41:34 PM (IST)

விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் : ஈரோடு பிரசாரத்தில் விஜய் பேச்சு
வியாழன் 18, டிசம்பர் 2025 12:30:15 PM (IST)

தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிப்பு : பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:54:37 AM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)










