» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவனந்தபுரத்தில் பஸ் மோதி குமரி மாவட்ட பெண் பலி: கணவரின் சிகிச்சைக்காக வந்தபோது சோகம்!
வியாழன் 15, மே 2025 12:06:34 PM (IST)
திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் பரபெட் சுவருக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கி படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்தவர் முஹம்மது ரஃபிக் என்பவரின் மனைவி நபீசத் (48). இவர் நேற்று காலை 11.30 மணியளவில் நபீசத் பேருந்திலிருந்து இறங்கி வெளியே செல்ல முயற்சி செய்தபோது, இன்னொரு பேருந்து அருகில் வருவதை பார்த்து பரபெட் சுவரை அருகே ஒதுங்கி நின்றார். ஆனால் அந்த பேருந்து நெருக்கமாக வந்ததால், அவர் சுவருக்கும் பேருந்துக்கும் இடையில் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.நபீசத்தின் கணவர் புற்றுநோய் நோயாளி. அவரது கீமோதெரபி சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்கவே திருவனந்தபுரத்திற்கு வந்திருந்தார். தம்பானூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நபீசத்தின் உடல் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அப்சல், ஷஹினா மற்றும் ஃபாசில் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










