» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் பறிப்பு : 10 பேர் கும்பல் கைது
திங்கள் 5, மே 2025 11:32:45 AM (IST)
ஓசூர் அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியை ஏமாற்றி பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த தம்பதி ராதம்மா-குள்ளப்பா. பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்ற நபர் உங்கள் வீட்டுக்கு அருகில் தங்கப் புதையல் இருக்கிறது என்று ராதம்மா - குள்ளப்பா தம்பதியிடம் ஆசை காட்டியுள்ளார்.
மேலும் புதையலை எடுக்க ஒரு கும்பலையும் அழைத்து வந்துள்ளார். இரவில் குழி தோண்டிய அந்த கும்பல் தம்பதியின் கவனத்தை திசை திருப்பி, செயற்கையாகப் புதைக்கப்பட்ட பானையிலிருந்து 2 தங்கக் காசுகளை எடுத்துக் காண்பித்து நம்ப வைத்துள்ளனர். மேலும் இன்னும் ஆழத்தில் பெரிய புதையல் இருப்பதாக கூறி அதை எடுக்க ரூ.8 லட்சம் பெற்றுள்ளனர்.
பின்னர் மற்றொரு பானையை எடுத்துக் கொடுத்து, அந்த பானைக்கு தினமும் பூஜை செய்து வர வேண்டும் என்றும், பூஜை முடிவதற்குள் திறந்து பார்த்தால் ரத்த வாந்தி எடுத்து சாவீர்கள் என்றும் பயத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை நம்பி அவர்களும் தினமும் பூஜை செய்து வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து அந்த கும்பல் மேலும் தங்களுக்கு பணம் தேவை என்று ராதம்மாவிடம் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராதம்மாவின் மகன் சந்தேகமடைந்து புதையல் இருப்பதாக கூறிய பானையை திறந்து பார்த்துள்ளார். அதில் ஒன்றும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தம்பதியை ஏமாற்றி பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










