» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஊரக வளர்ச்சி முகமையில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:51:50 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் தக்கலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் செயல்பட உள்ள பத்மநாபபுரம் உட்கோட்ட தரக்கட்டுப்பாடு ஆய்வு கூடத்திற்கு ஆய்வக உதவியாளர் (Lab Attender) தொகுப்பூதியத்தில் வெளிநிரவல் அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதி Diploma in Civil Engineering முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு விண்ணப்பிக்கும் நாளில் 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சாலைகள் மற்றும் பாலங்களில் கட்டுமான பொருட்கள் தரக்கட்டுபாடு சோதனை செய்யும் புகழ் பெற்ற ஆய்வு கூடத்தில் பணியாற்றி 5 வருட அனுபவம் மற்றும் எல்லா விதமான கட்டுமான பொருட்களிலும் தரக்கட்டுபாடு சோதனை செய்யும் முழுமையான தொழில்நுட்பம் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
மாத தொகுப்பூதியம் ரூ.12000/- மட்டும் வழங்கப்படும். விண்ணப்பம் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் கன்னியாகுமரி மாவட்டம் அலுவலகத்தில் 23.04.2025 முதல் 07.05.2025 மாலை 5.45 -க்குள் அனுப்பிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










