» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் ஏப்.23ல் தீர்ப்பு : உயர்நீதிமன்றம் தகவல்

திங்கள் 21, ஏப்ரல் 2025 5:14:35 PM (IST)

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் வரும் 23-ம் தேதி (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் (மார்ச்) அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக பரபரப்பாக கூறப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனையை சட்ட விரோதம் என்று அறிவிக்கக்கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, "சட்டத்தை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். சில அதிகாரிகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் இரவில் தூங்கவிடவில்லை. இது மனித உரிமை மீறல்" என்று அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் வாதிட்டது.

ஆனால், அமலாக்கத்துறை சார்பில், "சட்டத்துக்கு உட்பட்டே இந்த சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. பெண் அதிகாரிகளை இரவில் தங்கவைக்கவில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்ட நிலையில், வரும் 23-ந் தேதி (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory