» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் செய்திகளை கொடுக்கிறார் ஒருவர். கட்சி மற்றும் தலைமைக்கு தீரா பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் பணியாற்ற விரும்பவில்லை. என்னால் இயக்கத்துக்கோ, தலைவருக்கோ எள் முனை கூட சேதாரம் வந்துவிடக்கூடாது என இந்த முடிவை எடுத்துள்ளேன்.கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கட்சியினர் தொடர வேண்டும். ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெரும் மதிமுக நிர்வாகக்குழுவில் மல்லை சத்யா தனிமைப்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தொலைகாட்சி செய்தியை பார்த்துதான் துரை வைகோவின் விலகலை அறிகிறேன். கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோ முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் பிப்.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:50:54 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

லட்சக்கணக்கான கோடி கடன் எங்கே போனது? தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:43:06 PM (IST)

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:25:12 PM (IST)

மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)










