» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவண்ணாமலை அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்: லாரி உரிமையாளர்கள் 4 பேர் பலி!
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:29:55 AM (IST)

கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் - கார் நேருக்கு நேர் மோதி புதுச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை வழியாக நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் (வயது 44), லாரி உரிமையாளர்களான சைலேஷ்குமார் (38), சரோப் ஞானசேகரன் (50), சதீஷ்குமார் (52) ஆகிய 4 பேர் இருந்தனர்.
இவர்கள் தொழில் சம்பந்தமாக பெங்களூருவுக்கு சென்று விட்டு புதுச்சேரிக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஸ்டாலின் ஓட்டினார். அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் இவர்களது கார் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.காட்டுகுளம் அருகே இவர்களது கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ்சும், இவர்களது காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகாலை நேரம் என்பதால் காரை ஓட்டியவர் லேசாக கண்ணயந்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தால் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பவுர்ணமி தினம் என்பதால் திருவண்ணாமலை கிரிவலம் முடிந்துவிட்டு திருவண்ணாமலையில் இருந்து வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










