» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோதையாறு கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வியாழன் 3, ஏப்ரல் 2025 12:25:13 PM (IST)

கோதையாறு இடதுகரை கால்வாயில் ரூ.32 இலட்சத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணி அனை திறப்பிற்கு முன்பாக நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் பேச்சிப்பாறை அணையின் மூலம் தண்ணீர் வசதி பெறும் கோதையாறு இடதுகரை கால்வாயில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நெடுகை நீளம் 9,800 மீட்டரில் 35 மீட்டர் மண்சரிவு ஏற்பட்டது. அது தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
மேற்படி தளத்தில் நிரந்தர வெள்ள தடுப்பு பணியாக ரூ.32 இலட்சத்தில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அணை திறப்பதற்கு முன்பாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியினை செருப்பாலூர் உதவி செயற்பொறியாளர் மா.மூர்த்தி ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாம்பன் புதிய பாலம்; ராமேசுவரம் - தாம்பரம் ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 2:01:19 PM (IST)

தர்பூசணி விவகாரம் : உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்!
சனி 5, ஏப்ரல் 2025 5:41:21 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சனி 5, ஏப்ரல் 2025 12:14:24 PM (IST)

ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது
சனி 5, ஏப்ரல் 2025 11:25:34 AM (IST)

முட்டை கேட்டதால் மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர், உதவியாளர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:38:23 AM (IST)

சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ் உள்பட 3 பேர் கைது: இளம்பெண் மீட்பு!
சனி 5, ஏப்ரல் 2025 8:35:18 AM (IST)
