» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (02.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் இரயில்வே கேட் அருகில் ரூ.3.05 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து, மேலப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, தொற்றா நோய்கள் பிரிவு மற்றும் சிறுநீரக செயழிப்பு தொடர்பான இரத்த சுத்திகரிப்பு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி பகுதியில் ரூ12.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வில், உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) மரிய சகாய அந்தோணி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ரமாகோமதி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தர்பூசணி விவகாரம் : உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்!
சனி 5, ஏப்ரல் 2025 5:41:21 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சனி 5, ஏப்ரல் 2025 12:14:24 PM (IST)

ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது
சனி 5, ஏப்ரல் 2025 11:25:34 AM (IST)

முட்டை கேட்டதால் மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர், உதவியாளர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:38:23 AM (IST)

சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ் உள்பட 3 பேர் கைது: இளம்பெண் மீட்பு!
சனி 5, ஏப்ரல் 2025 8:35:18 AM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரிக்கு கத்திக்குத்து: தந்தை கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:24:32 AM (IST)
