» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள இந்த உள்ளுர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 11.04.2025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளுர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (26.04.2025) 4-வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் சாமானிய மக்களைப் பாதிக்கும் : விஜய் கண்டனம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:49:28 PM (IST)

மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர்: அமைச்சர் கே.என்.நேரு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:35:47 PM (IST)

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:02:57 PM (IST)

தென்காசி கோவிலில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:29:25 AM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே.9ல் வெளியாகும்: தமிழக அரசு அறிவிப்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:38:07 PM (IST)

மகாவீர் ஜெயந்தி விழா: ஏப்.10ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:33:52 PM (IST)
